ஆலையடிவேம்பு

முன்பள்ளி மழலைகளின் கண்காட்சி. அசத்திய பாலர் பாடசாலை மாணவர்கள்!

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச, மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் மாபெரும் கண்காட்சி நிகழ்வு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் இன்று (04) காலை 10.00 மணி முதல் சிறப்பாக இடம்பெற்றுவருகிறது.

இதனில் கனகதுர்க்கா, கனகாம்பிகை, விவேகானந்தா, விநாயகர், அம்பாள் ஆகிய பாலர் பாடசாலைகள் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

நிகழ்வில் அதிதியாக மகளிர் அபிவிருத்தி நிலைய தலைவி திருமதி. காந்திமதி ஜோய், ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் P.திலகராஜா, அன்னை சாரதா கலவன் பாடசாலையின் அதிபர் திருமதி K.துளசி நாதன், நாவற்காடு கிராம உத்தியோகத்தர் அ.சுபராஜ் மற்றும் பலரும் அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பலர் பாடசாலை மாணவர்களிடையே ஆக்கத்திறன்களை மேலும் விருத்தி செய்து கொள்ளும் முகமாக கண்காட்சி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில் குறித்த மாணவர்களால் கழிவு பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல வகையான கைப்பணிகளும், மாணவர்களால் வரையப்பட்ட சித்திரங்களும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

இந்த சிறுவர் கண்காட்சியை பார்வையிட ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் உட்பட பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
மாணவர்களின் ஆக்க திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பாலர் பாடசாலையின் ஆசிரியைகளுடைய வழிகாட்டலில், ஆனைத்து மாணவர்களும் தமது திறமைகளை மிகவும் சிறப்பான முறையில் வெளிகாட்டியிருந்தனர்.

குறித்த கண்காட்சி நிகழ்வு இன்றும் நாளையதினமும் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரைக்கும் என இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker