பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நாளை

வி.சுகிர்தகுமார்
பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில் கடந்த 31ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகி குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன் இடம்பெற்றுவருகின்றன.
அம்மனின் உற்சவம் கிரியைகள் கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்ற அம்மனின் திருக்கதவு திறக்கும் நிகழ்வுடனும் 04ஆம் திகதி இடம்பெறும் கால்யாணக்கால் நடும் சடங்குடனும் 05 ஆம் திகதி நாளை இடம்பெறும் திருக்குளிர்த்தி சடங்கு 06ஆம் திகதி இடம்பெறும் ஐயனார், வைரவர், நாகேஸ்வரர் சடங்குடன் இனிது நிறைவுறவுள்ளது.
ஆலய வண்ணக்கர் க.கார்த்திகேசு தலைமையில் நடைபெறும் வழிபாட்டுக்கிரியைகளை ஆலய பிரதம பூசகர் கு.ரவீந்திரநாதன்; தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைப்பர்
இதேநேரம் கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊரடங்கு சட்டமும் நாட்டில் 06ஆம் திகதி அதிகாலை வரை அமுலில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


