விளையாட்டு

மீண்டும் வீழ்ந்தது இலங்கை: ரி-20 தொடரை முழுமையாக வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, தசுன் சானக ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெபியன் அலென் 2 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரேல், ஒசேன் தோமஸ் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் 43 ஓட்டங்களையும், சிம்ரொன் ஹெட்மியர் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும், ஆந்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் ஆந்ரே ரஸ்ஸல் தெரிவு செய்யப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker