இலங்கைபிரதான செய்திகள்
Trending

மத்தியகிழக்கின் போர்நிலைமை குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விசேட உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி,

மத்திய கிழக்கில் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்தைநோக்கி பயணிப்பதற்கு தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும் எந்தவொரு இராணுவ மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது.

தொழில்நுட்பம் மற்றும் இராணுவத்தின் அடிப்படையில் மிகப் பெரிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கும் உலகத்திற்கு இது எவ்வளவு அழிவுகரமானது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, இலங்கை என்ற வகையில் எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டுதலையும் விரைவில் செய்ய வேண்டும்.

இந்தப் போர் நிலைமை இலங்கை மக்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், தனி மனிதர்களாக அதை எம்மால் வெல்ல முடியாது.

எனவே ஒரு நாடாக இதைச் சமாளிக்க ஒரு திட்டம் வகுக்கவுள்ளோம்.
அமைதியான உலகத்திற்கான சர்வதேச அர்ப்பணிப்பு மூலமே இதனை எம்மால் அதை அடைய முடியும் மத்திய கிழக்கில் நடக்கும் போர் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கும்
சுற்றுலாத் துறை, வெளிநாட்டு பணம் அனுப்புதல், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழில்களும் பாதிக்கப்படும்.

இந்தப் போர்ச்சூழலால் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்களால் மக்கள் இதுபோன்ற சூழ்நிலையில் வருத்தப்படுவது இயல்பானது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலினால் எமது நாட்டில் பாதிக்கப்படும் துறைகள் பல உள்ளன.

எரிபொருள் விநியோகம்.

எமது நாட்டவர்கள் பல புலம்பெயர்ந்து அற்கு வாழ்கின்றனர்.
அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். அதேபோல் எமது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு
பாரிய பங்களிக்கும் சுற்றுலாத்துறை மற்றும் கடற்றொழில் விமான சேவை ஆகியன இதனால் பல அழுத்தங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல் அதிலிருந்து மீள்வதற்கே நாம் எதிர்ப்பார்க்கின்றோம் பொதுவாக எமது நாட்டில் இவ்வாறான நிலைமை ஏற்படுவது இயல்பானதே இதற்காக நாம் மக்களை குறைகூறுவதில் அர்த்தமில்லை ஏனெனில் எமது மக்களுக்கு ஒரு அநுபவம் உள்ளது.

கடந்த காலத்தில் எரிபொருள் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வரிசையில் காத்திருந்தமை
பலர் உயிரிழந்தமை அதற்கு காரணியாகும்.

வார்த்தைகள் மற்றும் உண்மைகளால் மட்டும் சமூகத்தை நிலைப்படுத்த முடியாது,
நடைமுறையில் மக்கள் நெருக்கடியை எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே அதனை நம்ப வைக்க முடியும்.

தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து இதேபோன்ற பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது, மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் முந்தைய சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை,தற்போதைய போர் நிலைமையை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

நாங்கள் அதனையும் வெற்றிக்கொள்வோம்.

முழு நெருக்கடிக்கும் தீர்வு என்பது தனிப்பட்ட நபர்களின் கைகளில் இல்லை… முழு நெருக்கடிக்கும் தீர்வு காண்பதில் முக்கிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. அவர்களில், நாடாளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது, அதை யாரும் தட்டிக்கழிக்க முடியாது.

குடிமகனுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பு உள்ளது. அரசாங்கம், நாடாளுமன்றத்தில் உள்ள நாம் அனைவரும் மற்றும் மக்கள் அனைவரும் இதை ஒரே குறிக்கோளுடனும், மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் முன்மொழிவு.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker