ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிற்கு இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் தலமையில் நேற்று (12) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஒருங்கினைப்பினை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி
மேற்கொண்டதுடன் ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந் மேற்கொண்டதுடன்.

நிகழ்வு தொடர்பான விளக்கவுரையினை மாவட்டசெயலக இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிகழ்த்தினார்.

மற்றும் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், ஆலய பிரதிநிதிகள், மன்ற தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker