ஆலையடிவேம்பு

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று!

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று!

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்றைய தினம் (15.09.2023) வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் திரு.M.சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுவருகிறது.

மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் பங்குகொண்டு வருவதுடன் தேர்தல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் போது எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பான பல அறிவுறுத்தல்களை வழங்குவதனையும் காணக்கூடியதாக இருந்தது.

குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் மூலமாக சபாநாயகர், பிரதமர் உள்ளடங்கலாக 10 அமைச்சர்கள், 15 பிரதியமைச்சர்கள் உட்பட கனிஷ்ட பிரிவில் இருந்து 20 மாணவப்பாராளுமன்ற பிரதிநிதிகளும் சிரேஷ்ட பிரிவில் இருந்து 40 மாணவப்பாராளுமன்ற பிரதிநிதிகள் என மொத்தமாக 60 மாணவப்பாராளுமன்ற பிரதிநிதிகள்
தெரிவுசெய்யப்பட இருக்கிறார்கள்.

மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்தல், ஜனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான பரந்த புரிந்துணர்வை வழங்குதல் போன்ற மாணவர்களுக்கு நன்மை பயக்கும் நோக்கங்களுக்காக மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker