ஆலையடிவேம்பு

சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தினம் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில்….

 -ம.கிரிசாந்-

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 76வது மகாசமாதி தின நிகழ்வு இந்து மாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இன்று (19) மாலை 04.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்றத்தின் தலைவர் திரு.வே.சந்திரசேகரம், செயலாளர் ஶ்ரீ.மணிவண்ணன், உறுப்பினர்கள் மற்றும் அறநெறி ஆசிரியர்கள் என்பவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வு விசேட பூசை நிகழ்வுடன் ஆரம்பமாகியதுடன் அதனைதொடந்து ஆசியுரை, ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்ற செயலாளர் தேசமானி ஶ்ரீ.மணிவண்ணன் அவர்களால் வரவேற்புரை மற்றும் சுவாமி விபுலாநந்தர் அவர்கள் பெருமைகள் பற்றிய உரை இடம்பெற்றதுடன் மேலும் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களினால் தலைமையுரை மற்றும் சுவாமி விபுலாநந்தர் அவர்களின் வரலாறு தொடர்பாக பல விடயங்கள் பேசப்பட்டதுடன் , ஆலையடிவேம்பு பிரதேச இந்து மான்ற உறுப்பினர்கள் சுவாமி விபுலாநந்தர் சிறப்புகள் தொடர்பாக பற்றிய உரைகள், கவிதைகள் என்பனவும் இடம்பெற்றது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker