உலகம்

ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு!

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த குறித்த முதலை உலகப்போருக்குப் பின் ஹிட்லர் உயிரிழந்ததால் அங்கிருந்து 1946ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும் குறித்த முதலையை ஹிட்லர் வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா கூறிவந்தது.

இந்தநிலையில் குறித்த முதலை மொஸ்கோவில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்தது. ஹிட்லர் உயிரிழந்து 75 வருடங்கள் ஆன நிலையில் அவர் வளர்த்ததாகக் கூறப்படும் சார்ட்டனும் தனது 84வது வயதில் உயிரிழந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker