ஆலையடிவேம்பு சமூக அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆலையடிவேம்பு பகுதியில் டெங்கு ஒழிப்பு நான்கு நாள் செயத்திட்டம் வெற்றிகரமாக இன்றுடன் நிறைவு…

மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்பட்டது.
இவற்றினை கருத்திற் கொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பான செற்பாட்டினை ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம், Alayadivembuweb.lk இணையத்தளம் மற்றும் ஆலையடிவேம்புவெப் சமூக அமைப்பு, ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இவ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மேற்பார்வையில் ஆலையடிவேம்பு பொது சுகாதார வைத்திய அலுவலகம், ஆலையடிவேம்பு பிரதேச சபை,கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கி என்பவற்றின் பங்களிப்புடன் டெங்கு நுளம்பை அழிப்பதற்கான சிரமதான பணிகளை எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் முதலாம் நாள் அக்கரைப்பற்று-07, அக்கரைப்பற்று-7/1, அக்கரைப்பற்று-7/2, அக்கரைப்பற்று-7/3, அக்கரைப்பற்று-7/4 மற்றும் அக்கரைப்பற்று-8/1 பகுதிகளும். இரண்டாவது நாள் அக்கரைப்பற்று-08, அக்கரைப்பற்று-8/2, அக்கரைப்பற்று-8/3, அக்கரைப்பற்று-09 பகுதிகளும் மூன்றாம் நாள் ஆலையடிவேம்பு, நாவற்காடு, மற்றும் கோளவில்-03 எனும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றது.
மேலும் இறுதிநாள் ஆகிய இன்று நான்காவது நாள் பனங்காடு, சின்னப்பனங்காடு, மகாசத்திபுரம்,கண்ணகி கிராமம் பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்று முடிவடைந்தது.