இலங்கை

கிருமிநாசினி தெளிக்கச் சென்ற நகர சபை ஊழியர்கள் ஹட்டன் மீன் கடையில் கைவரிசை

கிருமி நாசினி தெளிக்கச்சென்ற ஊழியர்கள் ஹட்டன் மீன் விற்பனை நிலையத்திலிருந்த ஒருத்தொகை பணத்தை திருடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் நகர மத்தியிலுள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று (06) சென்ற ஹட்டன் நகர சபை உழியர்களினால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த ஊழியர்களில் சிலர் மீன் விற்பனை நிலையத்திலிருந்த பணப் பெட்டியிலிருந்து பணத்தை திருடிச்செல்வது சி.சி.டிவி கமராவில் பதிவாகியுள்ளது.

37 ஆயிரம் ரூபா பணத்தொகையே இவ்வாறு திருடப்பட்டள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறித்த மீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், குறித்த மீன் விற்பனை நிலையத்திலிருந்த மீன்கள் கடும் சுகாதார முறைமையோடு ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் அகற்றி அழிக்கப்பட்டது.

இந் நிலையில், நேற்று (06 ) மாலை நகரசபை ஊழியர்களினால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதன் போதே பணத் தொகை உட்பட மேலும் சில பொருட்கள் அங்கிருந்து திருடப்பட்டள்ளமை சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது .

சம்பவம் தொடர்பில் குறித்த மீன் விற்பனை முகாமையாளரினால் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker