தொழில்நுட்பம்

தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்!

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்   4 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பைத் தாண்டி, தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரை அதன் பங்கு விலையில் ஏற்பட்ட 6வீத அதிகரிப்பின் காரணமாக ஆல்பாபெட் இந்த உச்சத்தை எட்டியது.

என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்குப் பிறகு, 4 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பைத் தாண்டிய உலகின் நான்காவது நிறுவனமாக ஆல்பாபெட் மாறியுள்ளது.

இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு (AI) மீது ஆல்பாபெட்டின் வலுவான மற்றும் தெளிவான கவனம் ஆல்பாபெட்டின் பங்குகள் உயர உதவியுள்ளதாகவும், அதன் வணிக உத்தி குறித்த சந்தேகங்களை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, புதன்கிழமை, ஆல்பாபெட் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிளை விஞ்சி, சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.

இந்த நிலைகள் ஆல்பாபெட் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை வியத்தகு முறையில் மாறிவிட்டது என்பதற்கான சான்றுகளை வழங்குவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2025 ஆம் ஆண்டில் ஆல்பாபெட்டின் பங்கு விலை 65 சதவீதம் உயர்ந்துள்ளது.

வால் ஸ்ட்ரீட்டின் முன்னணி தொழில்நுட்ப பங்குக் குழுவான “மாக்னிஃபிசென்ட் செவனில்” உள்ள மற்ற நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker