இலங்கை

வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் : தப்பியோடிய பயணிகளால் குழப்பநிலை!!

 கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன சாரதி ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்க்கையை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளவத்தை, W.D சில்வா மாவத்தைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் வாகனத்தின் சாரதி ஹொக்கி ஸ்டிக் ஒன்றுடன் தனது வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார்.

பேருந்து சாரதி உரிய முறையில் வாகனம் ஓட்டவில்லை எனவும், தனது சமிக்ஞைகளை கவனிக்காமல் பேருந்து ஓட்டியமையினாலும் மோட்டார் வாகன சாரதி கோபமடைந்துள்ளார். அத்துடன் பேருந்து சாரதிக்கு நடு வீதியில் வைத்து அச்சுறுத்தும் வகையில் மோட்டார் வாகன சாரதி செயற்பட்டுள்ளார்.

பேருந்தினை கடுமையாக தாக்கியுள்ளதுடன் சாரதிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker