இலங்கை

இலங்கையில் கொரோனா ஆயிரத்தைத் தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 992 இலிருந்து 1020 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 10 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559 இலிருந்து 569 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 1020 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 442 நோயாளிகள் 08 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 135 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 23 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker