ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் முதலாம் நாள் இரவுநேர திருவிழா (படங்களும் இணைப்பு)

-அபிராஜ்,விபுர்தன்-
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா செவ்வாய் (2019.09.03) அன்று பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி இன்று (2019.09.04) காலை 11.00 மணியளவில் முதலாம் நாளுக்கான காலை நிகழ்வு திருக்கொடியேற்றப் பெருவிழா நடைபெற்று அதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்று இனிதே நிறைவடைந்தது.
மேலும் முதலாம் நாளுக்கான இரவுநேர திருவிழா இன்று மாலை 6.30 மணியளவில் திரு.வே.சிவசம்பு வட்டவிதனை குடும்பத்தினர் பங்களிப்புடன் இடம்பெற்று இரவு10.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.