இலங்கை

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – பஸ் சங்கங்கள் தெரிவிப்பு

பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களின் ஒன்றிணைந்த கால அட்டவணை நடைமுறைப்படுத்தவுள்ளது.

போக்குவரத்து சேவை தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

இயந்திர கோளாறு காணப்படும் பஸ்களை திருத்துவற்காக 3 இலட்சம் ரூபா கடன் வழங்குவத்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு பின்னர் பஸ்களின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்றே பயணிகளுக்கு பயணிக்க முடியும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அரச மற்றும் தனியார் பிரிவு நிறுவனங்களை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்ற முடியுமா என்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker