உலகம்

கொரோனா வைரஸைத் தொடர்ந்து சீனாவின் மற்றொரு மாகாணத்தில் அதிகரித்துள்ள பறவைக் காய்ச்சல்!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களைக் காவுகொண்டு உலகை மிரட்டிவருகின்றது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான வுஹானிலிருந்து 350 மைல் தொலைவில் அமைந்துள்ள தெற்கு மாகாணமான ஹுனானின், ஷாயாங் நகரில் பறவைக் காய்ச்சல் அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்திருப்பதாக சீன வேளாண்மை மற்றும் கிராம விவகார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு ஒரு பண்ணையில் 7,850 கோழிகளில் இந்தப் பறவைக் காய்ச்சல் இனங்கானப்பட்டுள்ளதுடன் அவற்றில் 4,500 கோழிகள் பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அதிகாரிகள் ஏற்கனவே 17,828 பறவைகளை அகற்றி பண்ணைகளை கிருமி நீக்கம் செய்து சீல் வைத்துள்ளனர்.

இதேவேளை, இந்த நோய் மனிதர்களை எளிதில் பாதிக்காது என்றாலும் இத்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பலர் இறந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது இறந்த பறவைகளிடமிருந்து நெருங்கிய தொடர்பு ஏற்படும் போது இக்காய்ச்சல் மனிதர்களுக்கு தொற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது.

மக்கள் இந்நோயால் பாதிக்கப்படும்போது, இறப்பு விகிதம் சுமார் 60 சதவீதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிக்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker