
காற்றாடிகள் பறக்கவிடப்படுவதால் விமான நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விமான நிலைய ஓடுபாதைகளுக்கு அருகில் காற்றாடி பறப்பது கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இது விமான விபத்துகளுக்கு பங்களிக்கும் காரணியாக உலகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்பாடு விமான நடவடிக்கைகளை நேரடியாகத் தடுக்கிறது.
பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
இலங்கையில், கட்டுநாயக்க, இரத்மலானா, ஹிங்குராக்கொட, சீன விரிகுடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாடி பறப்பது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
எனவே, இந்த ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு விமானப்படை வலியுறுத்தியது.