ஆலையடிவேம்பு
64 அணிகள் பங்குபற்றிய மருது விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளியிலான மென்பந்து சுற்றுத்தொடரில் மருது விளையாட்டு கழகம் சம்பியனானது….

மருது விளையாட்டு கழகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மாபெரும் மின்னொளியிலான மென்பந்து சுற்றுத்தொடர் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நேர்த்தியான முறையில் இடம்பெற்றுவந்தது.
கிரிக்கட் சுற்று தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் (01) இரவு இடம்பெற்றதுடன் குறித்த போட்டியில் மருது விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவாகியது.
சுற்றுத்தொடர் அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான விதிமுறைகளுடன் 64 அணிகள் பங்குபற்றிய மாபெரும் மின்னொளியிலான மென்பந்து சுற்றுத் தொடராகவும் இடம்பெற்றது.