ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான தின நிகழ்வு இன்று…

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான தின நிகழ்வு இன்று (21/11/2023) செவ்வாய்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதி அதிபர் திரு. ஜெயந்தன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வுகளுக்கு வருகை தந்த அதிதிகளை இசை வாத்தியங்கள் இசைத்து மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்.
இன் நிகழ்விற்கு அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் நிர்வாக பிரிவு பிரதிக் கல்விப் பண்ணிப்பாளர் திரு.S.சுரனுதன் அவர்களும் மேலும் சிறப்பு அதிதிகள், விஞ்ஞான பாட ஆசிரியர்கள், எனைய ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் விஞ்ஞானக்கழகத்தினால் திருசியம் நூல் நான்காம் பிரதி அதிதிகளுக்கு வெளியீட்டு வைக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.