ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் இன்று பாற்குடபவனி நிகழ்வு……

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி திருப்பெருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை பிரதமைத் திதியும், உத்தர நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுபவேளை காலை 06.00 மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.

அந்த வகையில் இன்று (30.09.2022) வெள்ளிக்கிழமை ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான பாற்குடபவனி நிகழ்வு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகளுடன் ஆரம்பமாகி நுற்றுக்கணக்கான பக்த அடியார்களால் வலம்வந்த பாற்குடபவனி ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலயத்தை வந்தடைந்து உற்சவ நிகழ்வுகள் சிறப்பானதாக இடம்பெற்றது.

மேலும் குறித்த ஆலயத்தின் தீமிதித்தல் நிகழ்வு (05.10.2022) காலை 05.30 மணிக்கு இடம்பெற இருப்பதுடன் எட்டாம் சடங்கு (12.10.2022) அன்றும் இடம்பெறுவதுடன் உட்சவ நிகழ்வுகள் அன்றைய தினம் நிறைவடையவும் இருக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker