ஆலையடிவேம்பு

இணைந்த கரங்கள் அமைப்பினால் புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழா…

புளியம்பத்தை மகாசக்தி முன்பள்ளி பாடசாலை திறப்பு விழாவானது கடந்த (26/09/2022) திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் கலைவாணி கனிஸ்ரவித்தியாலய அதிபர் திரு.ஆ.நல்லதம்பி தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்களுக்கான தளபாடங்கள்,விளையாட்டு உபகரணங்கள், மற்றும் பாடசாலை பெயர் பலகை திரைநீக்கம் என்பன இடம் பெற்றது.

இன் நிகழ்விற்கு அதிதிகளாக திருக்கோவில் வலயக் கல்விப் பண்ணிப்பாளர் வை. ஜெயசந்திரன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரி திரு.கருணாகரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் திரு.த.கிரோஜாதரன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி பாத்திமா ஆமிலா ஜமால்டீன், கால் நடை வைத்திய அதிகாரி திருமதி.T. கோகுலதாஸ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் பாத்திமா கரீமா,மாதர் சங்க உறுப்பினர்கள் அப்பிரதேச ஆலய தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான இணைந்த கரங்களில் பயணிக்கும் திரு. தினேஸ்ராஜ், ஜனபாலசந்திரன் குடும்பத்தினரும், கனகராஜ் நடராஜமணி குடும்பங்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கி இருந்தனர்.

அத்துடன் அதிக கஷ்ட புளியம்பத்தைக் கிராமத்தில் இயங்கி வருகின்ற திகோ / கலை வாணி வித்யாலயத்தில் கல்வி பயில்கின்ற 15 மாணவர்களுக்கும் மற்றும் அதே கிராமத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் திறந்து வைக்கப்பட்ட மகாசக்தி பாலர் பாடசாலையில் கல்வி பயில இருக்கின்ற 15 மாணவர்களுக்குமென மொத்தமாக 30 மாணவர்களுக்கு பாடசாலை நேரங்களில் சத்துணவு வழங்க இனக்கம் தெரிவித்துள்ள ராஜ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரான புவனேஷ் ராஜா அவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பிற்கும் பிரதேச மக்கள் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இப் பாடசாலைக்கு பெயர் பலகை திறந்து வைத்தலும் அதனை நிவர்த்தி செயும் வகையில் இணைந்த கரங்களில் பயணிக்கும் புதுப்பொலிவான பெயர்ப்பலகை செய்து திறந்து வைத்தமை இப் பாடசாலையின் சமூகத்தினையும் மாணவச் செல்வங்களையும் மகிழ்வுட்டும் நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கான விளையாட்டு உபகரங்கள் மற்றும் உபகரணங்களை இணைந்த கரங்கள் ஊடாக இணைந்த கரங்கள் இணைப்பாளர்களான திரு.லோ.கஜரூபன், திரு. S.காந்தன் திரு.வாணன், மற்றும் இணைந்த கரங்கள் ஆதரவாளர்களான – திரு செல்வநாயகம் ஐயா திரு.லக்ஸ்மிகாந் ஆகியோரினாள் வழங்கி வைத்ததுடன்.

இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆசிரியர்களுக்கான ஒரு மாத கொடுப்பணவும் முன்பள்ளி ஆசியரிடம் வலயக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker