ஆலையடிவேம்பு

அறநெறி பாடசாலை மாணவர்களின் வருகையை ஊக்கிவிக்கும் முகமாக ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் வழங்கி வைப்பு…

-கிஷோர், அபிராஜ்-

ஆலையடிவேம்பு பிரதேச அறநெறி பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் வருகையை ஊக்கிவிக்கும் முகமாக அறநெறி பாடசாலை மாணவர்களின் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்ற கட்டிட வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த அறநெறி பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதி அனுசரணையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் முயற்சியால் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தின் தலைவர் திரு.வே.சந்திரசேகரம், செயலாளர் தேசமானி ஶ்ரீ.மணிவண்ணன், பொருளாளர் ஆ.தர்மதாச மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தின் உறுப்பினர்கள் பங்களிப்புடன் பயனாளிகள் பயன் பெரும் வகையில் வழங்கி வைக்கப்பட்டது.
.

குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்குவதற்காக நிகழ்வானது கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker