ஆலையடிவேம்பு

26,941 மக்கள் தொகை கொண்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய பாரிய கையெழுத்து வேட்டை இரண்டாம் நாள் நிலவரம்…

-கிரிசாந் மகாதேவன்-

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் ஒன்று இல்லாமல் மக்கள் தொலைதூரங்களுக்கு சென்று குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ளும் அவல நிலையில் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்ற நிலையில்.

பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற குறித்த வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு 5000 பேரின் கையெழுத்து வேண்டி கையெழுத்து வேட்டை தன்னார்வம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இரண்டாம் நாள் ஆகிய இன்றைய தின முடிவில் 2100 கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் வேண்டிய கையெழுத்து வேட்டை கட்டம் கட்டமாக  கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் தன்னார்வம் கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் ஆரவாரம் இல்லாமல் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, வச்சிக்குடா, ஆலையடிவேம்பு, நவக்காடு, கோளவில்,பனங்காடு, கண்ணகிகிராமம், அளிக்கம்பை என அனைத்து பிரதேச பகுதிகளையும் உள்ளடக்கியதாக சமூக நலனில் அக்கறை கொண்டு இடம்பெற்று வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker