ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கொரோனா நோய் முற்றாக அகலவேண்டி விசேட வழிபாடு இன்று….

ஜினுஜன்
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று (09/11) கொரோனாவில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும்படி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டில் இருந்து இந்நோய் அகல வேண்டும் எனவும் மதஸ்தலங்களில்
பிரார்த்தனை செய்யுமாறும் நாட்டு மக்களும் வேண்டுதலில் ஈடுபடுமாறும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய திணைக்களமானது கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மதஸ்தலங்களில் வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது.இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு மற்றும் விசேட பூஜை வழிபாடுகளும்; சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
ஆலய நிர்வாக சபையினரின் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகள் நித்தியானந்த சுவாமிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
வழிபாடுகளில் நாட்டில் இருந்து கொரோனா நோய் முற்றாக அகலவேண்டும் எனவும் நாட்டு மக்களும் நலமுடன் இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு நல்லாசி வேண்டியும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.