இலங்கை
கம்பஹாவில் 39தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா

கம்பஹாவில் 39 தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் தொடர்பாக, கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹாவின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை முதலீட்டு சபையின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த 414 தொழிலாளர்களும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த 12 தொழிலாளர்களும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தவிர மேலும் பத்து தொழிற்சாலைகளை சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.