ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தினரினால் கொரோனா வைரஸினை கட்டுபடுத்தும் முகமாக முக கவசங்கள் வழங்கிவைப்பு…

நாட்டில் பரவிவரும் கொரோனா கோவிட் 19 தொற்றுநோய் பரவல் தடுப்பு தொடா்பில் விழிப்புணா்வினை ஏற்படுத்தும் முகமாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அவா்களின் அறிவுறுத்தலுகளுக்கமைவாக இன்று ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தினர் விழிப்புணா்வுச் செயற்பாட்டில் கலந்து கொண்டனர்.

இதன் முதற்கட்டமாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு போன்ற பிரதேசங்களில் பொது இடங்களில் முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள் உதயம் விளையாட்டுக் கழகத்தினரினால் வழங்கி வைக்கப்பட்டது.

-உதயம் விளையாட்டுக் கழகம் ஆலையடிவேம்பு முகநூல் பக்கம்-

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker