இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : காத்திருக்க வேண்டியதில்லை!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் செயற்றிறன் வாய்ந்த விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் உபகரணத் தொகுதியொன்றை கட்டுநாயக்க விமான நிலையத்திற்காக கொள்வனவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உபகரணங்களின் பெறுமதி ஆறு கோடிரூபாவாகும். இவற்றில் எக்ஸ் கதிர் இயந்திரங்கள், வெப்பநிலை உணர்திறன் கொண்ட பரிசோதனைக் கருவிகள் போன்றவையும் அடங்கும்.

இதன்மூலம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் பொதிகளை இலகுவாக பரிசோதிக்க முடியும். நவீன தொழில்நுட்ப வசதி உட்புகுத்தப்பட்டிருப்பதால் பொதிகளைப் பரிசோதிப்பதற்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டிய நேரத்தின் அளவு குறைவடையும்.

இதுவரை காலமும் விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளை சோதனை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டுவந்த கருவி சுமார் 19 வருடகாலங்கள் பழமையைானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker