விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய இளைஞன்!

டிக்கோயா நகர பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியின் டிக்கோயா நகர பள்ளிவாசலுக்கலுகில் இன்று (07) முற்பகல 10 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
நோர்வூட் பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் கனரக லொறியொன்றினை முந்திச்செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை மீறிய மோட்டார் சைக்கிள் லொறிக்கு அடியில் நுழைந்து விபத்துக்குள்ளானது.
மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் சைக்கிளிலிருந்து பாய்ந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளர்.
மேலதிக விசாரணைகள் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த விபத்து ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா நகர பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடதக்கது.