இலங்கை

அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் வில்கிளப் (Will club) முழுநாள் வட்டமேசை மாநாடு அம்பாறையில் இடம்பெற்றது.

ஜே.கே.யதுர்ஷன்

அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் செயல்திட்டத்தின் கீழ் (Search for common ground) சேர்ச்போ கொமன் கிறவுண்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற 5வது வில்கிளப் (Will club) முழுநாள் வட்டமேசை மாநாடு அம்பாறையில் நேற்று (28) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் நிறுவனத்தின் இணைப்பாளர் சைமன் வாணி தலைமையில் இடம்பெற்ற அமர்வுகளில் (Search for common ground) சேர்ச்போ கொமன் கிறவுண்ட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான பொது ஆலோசகர் நளினி ரட்ணராஜா கலந்து கொண்ட நெறிப்படுத்தினார்.

மூன்று கட்டங்களாக இடம்பெற்ற நிகழ்வுகளில் முதற்கட்ட அமர்வில் உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக உள்ளூராட்சி மன்ற தவிசாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

இரண்டாவது அமர்வில் சேர்ச்போ கொமன் கிறவுண்ட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான பொது ஆலோசகர் நளினி ரட்ணராஜா கலந்து கொண்டு பெண்களும் அரசியலும் எனும் தொனிப்பொருளில் கருத்துரைத்தார்.

இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அப்துல் அசீஸ்; வளவாளராக கலந்துகொண்டு பயங்கரவாத தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு நீதிச்சட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

மூன்றாவது அமர்வில் உள்ளுராட்சி சபை பெண் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட செயற்றிட்ட அறிக்கை தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான விளக்கமும் ஊடகவியலாளர்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது ஊடகவியலாளர்களும் உள்ளுராட்சி பெண்களுக்கிடையிலான நெருங்கிய வலையமைப்பினை கட்டியெழுப்பும் தளமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker