இலங்கை
தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அறிவித்தல்

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையில் இவ்வாறு தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.