ஆலையடிவேம்பு
வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு….

கிழக்கு மாகாணம், ஆலையடிவேம்பு பிரதேச, வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (07) காலை 8.30 மணிமுதல் கிரிகைகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருவதுடன் மாலை 4.00 மணிவரை பக்தர்கள் எண்ணைக்காப்பு சாத்தலாம் மேலும் நாளைய தினமும் (08) எண்ணைக்காப்பு சாத்தலாம்.
கும்பாபிஷேகம் எதிர்வரும் 09/07/2023 ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.42மணிமுதல் 10.20 மணிவரையுள்ள சுப நேரத்தில் இடம்பெற இருக்கிறது.