இலங்கை

மருந்துகளை இறக்குமதி செய்ய கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சுகாதாரத் துறை தொடர்பான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நன்கொடையாளர்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனைகளுக்குத் தேவையான 234 வகையான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

உலக சந்தையில் மருந்துகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, உள்ளுர் மருந்துத் தொழிற்துறையை துரிதமாக அதிகரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களை இந்தியக் கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குமான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker