உக்ரைன் விமானத்தினை தவறுதலாக சுட்டு வீழ்த்தியமை தொடர்பாக பலர் கைது!

உக்ரைன் பயணிகள் விமானத்தினை ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியமை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது இடம்பெற்றுவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த கைது தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் இடம்பெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.
இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள்ளானதாக ஈரான் ஆரம்பத்தில் கூறியிருந்தாலும், பின்னர் மனித தவறு காரணமாக தங்களது ஏவுகணையே விமானத்தை தாக்கியதாக ஈரான் ஒப்புக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அத்துடன், ஈரானுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென அமெரிக்காவும், கனடாவும் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.