இலங்கை

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 34 ஆயிரத்து 956 பேர் கைது! – 8 ஆயிரத்து 948 வாகனங்களும் பறிமுதல்

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 34 ஆயிரத்து 956 பேர் பொலிஸாரினால் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு,  8 ஆயிரத்து 948 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (21) நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணித்தியாலம் வரையான காலப்பகுதியினுள் மட்டும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 131 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 34 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker