இலங்கை

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுகொலை செய்யப்பட்ட மகனுக்கு நீதி வேண்டுமென தாயார் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதிவேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், (34 வயது) மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று (செவ்வாய்க்கிழமை)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும் குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது சந்தேகநபரான மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உயிரிழந்தவரின் தாயார், எனது  பிள்ளைக்கு நீதி கிடைக்கவேண்டும். அதை மாத்திரமே எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker