இலங்கை

பிரதேச சபை தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த கலையரசன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும் என்பதற்காக இராஜினாமாச் செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ்ப் பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் த.தே.கூட்டமைப்பிற்குக் கிடைக்கப் பெற்ற ஒரேயொரு தேசியபட்டியல் ஆசனம் கலையரசனுக்கு வழங்கப்பட்டது

கடந்த 2006 இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையில் போட்டியிட்டு உதவி தவிசாளராகத் தெரிவானார். பின்னர் 2008 இல் தவிசாளரானார். பின்னர் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடு தெரிவாகினார். பின்னர் மீண்டும் 2018 உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தவிசாளரானார். அப்பதவியை தற்போது இராஜிமாச் செய்துள்ளார்.

கடந்த 2015 பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிட்ட க.கோடீஸ்வரன் 17799 வாக்குகளைப் பெற்று தெரிவானார். அடுத்த அதிகூடிய 14723 வாக்குகளை கலையரசன் பெற்றதுடன் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட போதும் ஒரு ஆசனத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker