இலங்கை

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கப்படுகின்றது எரிபொருள் விலை? – ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 192 ரூபாய்?

இலங்கையில் இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இவ்வாறானதொரு விலை அதிகரிப்பை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளுக்கு நாள் நஷ்டமடையும் நிறுவனமாக தொடர்ந்தும் இயங்க முடியாது என்பதால், மிகப் பெரிய அளவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 192 ரூபாய் வரையும் டீசலின் விலையை 169 ரூபாய் வரையும் அதிகரிக்க வேண்டும் என கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றால், பொது போக்குவரத்து, முப்படைகள், பொலிஸ் உட்பட அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பது என தீர்மானிக்க நேரிடும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker