இலங்கைபிரதான செய்திகள்
Trending

2026 வெசாக் திகதியை மாற்றியமைக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

2026 ஆம் ஆண்டு வெசாக் பெர்ணமி தினத்தை மாற்றியமைக்கக் கோரி இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான தேரர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.

2026 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி மற்றும் 30 ஆம் திகதி என இரண்டு பௌர்ணமி தினங்கள் வருகின்றன.

தற்போது பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியில், மே மாதம் 01 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினமாகவும், மே மாதம் 30 ஆம் திகதி ‘அதி பொசன்’ பௌர்ணமி தினமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், மே மாதம் 01 ஆம் திகதி அன்று ‘விசா’ சுப நேரம் அமையாத காரணத்தினால், அந்தத் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாக ஏற்றுக்கொள்வது குறித்து சமூகத்தில் தற்போது கடும் விவாதங்கள் எழுந்துள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவதானம் செலுத்திய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களையும் வினவி, நீண்டகால சாசன மரபுகளுக்கு அமைய ‘விசா’ அமையும் மே மாதம் 30 ஆம் திகதியையே வெசாக் பௌர்ணமி தினமாகக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மே 30, 2026 அன்று வெசாக் பெளர்ணமி தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், வெசாக் தொடர்பான அனைத்து பாரம்பரிய மத அனுசரிப்புகள் மற்றும் அரசு விழாக்கள் அந்த திகதியில் திட்டமிடப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker