இலங்கை

தெரிவுக்குழு முன் ஜனாதிபதி தெரிவித்தது என்ன?

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹரான் குறித்தும் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ்மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை.

அனாவசியமான விடயங்கள் குறித்து என்னிடம் பேசிய நபர்கள் அவசியமான விடயத்தை மறைத்துள்ளனர் என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு குழுக்கூட்டம் நம்பிக்கைக்குரிய இடமாக கருதவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது பல்வேறு காரணிகள் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மற்றும் உறுப்பினர்கள் ஊடகங்கள் இல்லாது இந்த வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker