உலகம்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியா கடல் எல்லைக்குள் ஊடுருவிய தென் கொரிய கப்பல்கள்!

 

தங்களது கடல் எல்லைக்குள் தென் கொரிய கப்பல்கள் ஊடுருவியதாக, வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசாங்க அதிகாரியின் உடலைத் தேடியே, தென் கொரிய கப்பல்கள் வட கொரியா எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து வட கொரியா அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘வட கொரிய கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு அதிகாரியின் உடலைத் தேடி, தென் கொரியக் கப்பல்கள் அத்துமீறி அந்த எல்லைக்குள் நுழைந்தன. இதுபோன்ற ஊடுருவலை தென் கொரியா உடனடியாக நிறுத்த வேண்டும்.

அப்போதுதான் இரு தரப்பு பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்படும். தென் கொரியாவின் ஊடுருவல் அண்மையில் நடைபெற்றதைப் போன்ற விரும்பத் தகாத சம்பவம் மீண்டும் ஏற்படுவதற்கு வழிவகுத்திருக்கக் கூடும்’ என்று அந்த செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைப் பகுதியில், சட்டவிரோதமாக மீன் பிடிக்கப்படுவதைக் கண்டறிவதற்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு அரசு அதிகாரி, எரிந்த நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டதாகவும், வட கொரிய இராணுவம் அவரை சுட்டுக் கொன்று உடலை எரித்ததாகவும் தென் கொரியா கட்நத வியாழக்கிழமை கூறியது.

இந்தச் சம்பவம் குறித்துட வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் வருத்தம் தெரிவித்ததாக அவரது ஆலோசகர் சூ ஹூன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதனிடையே வட கொரியா கடல் எல்லைக்குள் தென் கொரிய கப்பல்கள் ஊடுருவியுள்ளமை, இருநாடுகளுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker