திருக்கோவில் பிரதேச சபை ஊடாக விநாயகபுரம் பகுதியில் புதிய நூலகம் திறந்து வைப்பு…..

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் திருக்கோவில் பிரதேச சபை ஊடாக 13 இலட்சம்ரூபாய் செலவில் புதிய நூலகம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திருக்கோவில் கெளரவ தவிசாளர் திரு.இ.வி.கமலராஜன் அவர்களினால் வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இவ் நூலகமானது திருக்கோவில் பிரதேச சபையில் நிதிபங்களிப்பில் பொதுமக்களின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
மேலும் இவ் விழாவில் தம்பிலுவில் கவிஞர் தம்பிலுவில் ஜெகா மற்றும் ஓய்பெற்ற கிராசேவை நிறுவாக உத்தியோத்தர் இராஜரொட்ணம் அவர்களினால் புத்தகங்களும் இவ் நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி கமராஜன் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் கல்விமான்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் அதிபர்கள் ஆலய குருமார்கள் பிரதேச சபை மற்றும் தம்பிலுவில் பொது நூலக உத்தியோத்தர்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில்.