தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமனம்

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்றை சேர்ந்த தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனத்தை இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழு அன்மையில் வழங்கி வைத்துள்ளது.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தனது ஆரம்பகல்வியை அக்கரைப்பற்று அல்ஹிதாயா வித்தியாலயத்தில் பயின்றார். பின்னர் கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வியை தொடர்ந்த அவர் உயர்தரக்கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலயத்தில் கற்றார்.
பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அங்கு பொருளியல் சிறப்பு பட்டத்தை பூர்த்தி செய்தார். இதன் பின்னராக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் ஆசிரியராக இணைந்து கொண்ட அவர் அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்றார். தொடர்ந்து பட்டத்தின் கல்வி டிப்ளோமா, கல்வி முதுமானி, பட்டப்பின் கல்வி முகாமைத்து நெறி ஆகியவற்றுடன் பாகிஸ்தான் மற்று;ம் அயர்லாந்து போன்ற நாடுகளில் வான்மைத்துவ பயிற்சி நெறி சிறப்பு கற்கையினையும் நிறைவு செய்தார்.
இவ்வாறு கடந்த 25 வருடங்களாக அரசகல்விச் சேவையில் இணைந்து தனது பணியை ஆற்றிவந்த நிலையிலேயே அன்மையில் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்தை தொடர்ந்து அக்கரைப்பற்று மக்கள் மகிழச்சி அடைந்துள்ளதுடன் அக்கரைப்பற்று உள்ளிட்ட பல்வேறு பிரதேச கல்வியியளாளர்களும் பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.