விளையாட்டு

ஆட்டநிர்ணய சதி: குமார் சங்காவிற்கும் அழைப்பு

விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை காலை 9 மணிக்கு விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு குமார் சங்கக்காரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா நேற்றும் இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க இன்றும் விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker