கொவெக்ஸ் திட்ட தடுப்பூசி – நாளை முதல் வழங்கப்படும்

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், இன்று கிடைத்துள்ள தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்தன. ´கொவெக்ஸ்´ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சுக்கு 14 லட்சம்; எஸ்ட்ரா ஸெனெக்கா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.தடுப்பூசியை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றறுக்கொண்டார். இதன் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிடார்.
இதேவேளை, கொவிட் வைரஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தடுப்பூசியை ஏற்றும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவின் மும்லையிலுள்ள சீரம் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இன்று (07) அதிகாலை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.