இலங்கை
கொழும்பில் மற்றுமொரு இளைஞன் திடீர் மரணம்.. கோரோனா என சந்தேகம்.

கொழும்பில் இளைஞர் ஒருவன் திடீரென உயிரிழந்தமையால் மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் ஆட்டுப்பாட்டி தெருவில் உயிர் இழந்தநிலையில், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதுவித நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் உயிரிழந்த காரணத்தினால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். என்ற சந்தேகம் எழுந்துள்ளது
இதன் காரணமாக இவரது உடல் மாதிரிகள் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
போதைப்பொருளுக்கு தீவிர அடிமையான இளைஞரே இவ்வாறு இறந்துள்ளார்.
இதேவேளை அண்மைக்காலமாக கொழும்பில் பல பகுதிகளில் தொடர் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.