எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார் – ஐக்கிய மக்கள் சக்தி

தமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் தேர்தல்களில் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வியை கண்டு தாம் மகிழ்ச்சியடையப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இப்போது ஒன்றுபடுவதற்கான சிறந்த வாய்ப்பு என்றும் எனவே எங்களுடன் பணியாற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
ஆனால் அவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை பதவிகளுக்கு நியமிக்க விரும்பினால், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எங்களுடன் பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சியை அழைக்கிறோம். இந்த கட்சி பிளவுபட வேண்டியதில்லை. கட்சியை முறித்துக் கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாக தொடரும் மற்றும் வலுவான எதிர்கட்சியாகவும் நாடாளுமன்றில் செயற்படும்.” என கூறினார்.