இலங்கை

இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா ? சர்ச்சைகளுக்கு பதிலளித்த முத்தையா முரளிதரன்!!

நான் ஒருபோதும் அப்பாவி மக்களின் படு கொலையை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன். எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு தமிழ் மொழி தெரியாது என்பது மற்றுமொரு செய்தி என இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு த வறான பார்வை இருந்து வருகின்றது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்த அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்னும் தமிழ்த் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கக் கூடாது என்று பல்வேறு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அத்துடன் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் குறித்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், திரைப்படத்தில் நடிக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதிக்கும் அந்த படத்தில் நடிக்கக் கூடாது என பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker