இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம்

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு
கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வானது இன்று (02) மாலை 3,00 மணிக்கு நிந்தவூர் ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு முன்னிலை அதிதியாக சிவஶ்ரீ பத்மலோஜன் சர்மா, கலந்து கொண்டதுடன் திரு வே. ஜெகதீசன் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றதுடன் ஆன்மிக அதிதி பொ.அமிர்தலிங்கம் பூசகர் ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் நிந்தவூர் சிறப்பு அதிதிகளாக திரு வே.வாமதேவன் (செயலாளர்) சிவனருள் பவுண்டேசன் அம்பாரை, திரு எஸ்.சுரோஸ்குமார் கலாசார உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் நிந்தவூர் மற்றும் அறநெறிப்பாடசாலைமாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டணர்.