இலங்கை
சிவனருள் பவுண்டேசனால் நிர்மாணிக்கப்பட்ட வீடின்றி பரிதவிக்கும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு.

சிவனருள் பவுண்டேசன் அமைப்பானது தற்காலிக வீடுகளில் கூடுதளவான அங்கத்தவர்களுடன் வீடின்றி பரிதவிக்கும் குடும்பங்களுக்கு வீடமைத்து வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் வைத்திய கலாநிதி ஜெ.நமசிவாயம் ஐயா அவர்களின் நிதி ஒருங்கிணைப்பின் கீழ் இலண்டனில் வசிக்கும் திரு.ரி.பாலேந்திரா ஐயா அவர்களின் ரூபா மூன்றரை இலட்சம் (Rs.350,000/-) நிதி உதவியில் அம்பாறை பாணமை கிராமத்தில் வசிக்கும் மிகவும் வறுமையான இரு குடும்பங்களுக்கு இன்றைய தினம் இரு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சிவனருள் பவுண்டேசன் செயலாளர் திரு.வே.வாமதேவன், பொருளாளர்.திரு.க.ஜனார்த்தனன், சமூக சேவை செயற்பாட்டாளர் திரு.கணேக்ஷ் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.