இலங்கை

அதிகரிக்கும் வெடிப்புச் சம்பவங்கள்- நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இலங்கை தர நிர்ணய நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

எரிவாயு பிரச்சினைக்கு எதிரான மனு இன்று (வெள்ளிக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SLSI தரத்தை பூர்த்தி செய்யாத ஆனால் சந்தையில் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுமாறும் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இலங்கை தர நிர்ணய நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய எரிவாயு சிலிண்டர்களை மாற்றியமைக்கும் போது நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 2022 ஜனவரி 26ஆம் திகதிக்கு ஒத்திகைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker